Monday 20th of May 2024 06:32:14 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் 10,059 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று!

இலங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் 10,059 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று!


இங்கிலாந்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு ஒமிக்ரோன் திரிவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மொத்தம் 10 ஆயிரத்து 59 பேருக்கு நேற்று ஒமிக்ரோன் தொற்று உறுதியானதாக இங்கிலாந்து சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது சனிக்கிழமை பதிவான ஒமிக்ரோன் தொற்று நோயாளர் தொகையை விட 3 மடங்கு அதிகமாகும்.

இவற்றுடன் நாட்டில் ஒமிக்ரோன் திரிபு தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,968-ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திடீரென 1 இல் இருந்து 7-ஆக அதிகரித்துள்ளது.

ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்ட 10,059 பேர் உள்ளடங்கலாக நேற்று மொத்தம் 90,418 பேருக்கு அனைத்து வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன், மொத்தம் 125 கொரோனா மரணங்களும் நேற்று பதிவாயின.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையான தரவுகளின் படி தொற்று நோய் தொடங்கியதில் இருந்து இதுவரை இங்கிலாந்தில் மொத்தம் 1,12,79,428 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,47,173 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.

தற்போது நாடெங்கும் உள்ள மருத்தவமனைகளில் தொற்றுக்குள்ளாகி கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் 13,90,401 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 875 பேர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE